வெள்ளி, 29 ஏப்ரல், 2011

பாரம்பரிய சீன நகைச்சுவைகள் 100 என்ற புத்தகத்திலிருந்து (#10)

சூச்சோவில் வாழ்ந்த ஒரு பணக்காரனுக்கு முட்டாள் மகன் ஒருவன் இருந்தான். 30 வயது ஆகியும் 50 வயதான தந்தையின் உழைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் சோதிடர் ஒருவரை அவர்கள் சந்தித்தார்கள். ஜாதகத்தைக் கணித்த அவர், தந்தை 80 வயது வரையிலும், மகன் 62 வயது வரையிலும் வாழ்வார்கள் என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் 'எங்க அப்பா 80 வயதில் சாகப் போகிறார், 60 வயதுக்குப் பிறகு எனது கடைசி இரண்டு ஆண்டுகளுக்கு யார் என்னைக் காப்பாத்துவாங்க' என்று கதற ஆரம்பித்தான் மகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக