வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீன நகைச்சுவைகள் - #28-3

ஒருவன் பாத்திரம் ஒன்றைத் தோளில் சுமந்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தான். வழியில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கவே, பாத்திரத்தைக் கீழே வைத்து விட்டு தெருவோரமாகப் போனான்.

அந்த வழியாகப் போன திருடன் ஒருவன் இதை கவனித்தான். மெதுவாக பாத்திரத்தை எடுத்துத் தன் தலைமீது வைத்துக் கொண்டு அவனும் தெருவோரமாகப் போய் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான்.

பாத்திரத்தின் உரிமையாளன் திரும்பி வந்து பார்த்தால் பாத்திரத்தைக் காணவில்லை.

'எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறாய்! என் தலையில் இருக்கும் பாத்திரத்தைப் பார்த்தாயா? திருட்டுப் போய் விடக்கூடாது என்று தலையில் வைத்துக் கொண்டேன். உன்னை மாதிரி தரையில் வைத்து விட்டுப் போனால் திருடு போகாமல் என்ன நடக்கும்' என்று திருடன் உரிமையாளனைத் திட்டி விட்டு பாத்திரத்தோடு நடையைக் கட்டினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக