வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீன நகைச்சுவைகள் #28-2

பட்டப்பகலில் வீட்டை உடைத்துத் திருடப் போன திருடன், பூசை மணியை திருடிக் கொண்டு வெளியே வந்தான். வாசலைத் தாண்டி தெருவுக்கு வரும் நேரத்தில், வீட்டு உரிமையாளர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு வணக்கம் சொன்ன திருடன் 'தாத்தா, பூசை மணி வாங்கிக்கிறீங்களா?' என்று கேட்டான்.

'வேண்டாம்பா, வீட்டில ஏற்கனவே இருக்கு' என்றார்.

திருடிய பொருளுடன் ஜாம் ஜாம் என்று போய் விட்டான் திருடன். மாலையில் பூசைக்காக மணியைத் தேடும்போதுதான் வீட்டுக்காரருக்கு திருட்டு போனது தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக