வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீன நகைச்சுவைகள் #31

மனைவிக்கு நடுங்கியவனாக வாழ்ந்து கொண்டிருந்தான் ஒருவன். ஒரு நாள் அவளைக் கடுப்பேற்றியதற்குத் தண்டனையாக, அவனது விரல்களைக் குச்சிகளுக்கு இடையே வைத்து நசுக்கித் தண்டிக்க முடிவு செய்தாள் மனைவி.

"வீட்டில் குச்சி எதுவும் இல்லை!" என்று சொன்னான்.

அடுத்த வீட்டுக்குப் போய் இரண்டு குச்சிகளை கடன் வாங்கிக் கொண்டு வர அனுப்பினாள் மனைவி. வெளியே போகும் போது ஏதோ முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. உடனேயே அவனைத் திரும்பக் கூப்பிட்டுக் கேட்டாள்

"என்ன! முணுமுணுத்துக்கிட்டு போறே?"

"ஒண்ணுமில்லே, தண்டனைக்கான கருவிகள் நம்ம வீட்டிலேயே இருக்கணும்னு சொன்னேன் அவ்வளவுதான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக