வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீன நகைச்சுவைகள் #32

ஒரு கொள்ளைக்காரனும் நன்கொடை கேட்டுப் போகும் பூசாரியும் ஒன்றாக காட்டில் நடந்து கொண்டிருந்தார்கள். எதிரில் திடீரென்று ஒரு புலி வந்து அவர்கள் மேல் பாய்ந்தது.

கொள்ளைக்காரன் உடம்பைக் குனிந்து போராடத் தயாரானான். புலி பயப்படாமல் அவர்களை நோக்கி வந்தது. கடைசி முயற்சியாக, தனது நன்கொடை புத்தகத்தை புலியின் மீது வீசினார் பூசாரி. உடனேயே புலி பயத்தில் பின்வாங்கி ஓடி விட்டது.

"அப்பா, அது எப்படி கொள்ளைக்காரனைப் பார்த்துக் கூட உங்களுக்கு பயமில்லை. இந்த பூசாரி இப்படி பயப்படுத்தி விட்டானே" புலிக்குட்டி புலியிடம் கேட்டது.

"கொள்ளைக்காரன் எதிர்த்து வந்த போது, அவனுடன் கட்டிப் புரண்டு சண்டை போடத் தயாராகிக் கொண்டேன். ஆனால், பூசாரி என்னிடம் நன்கொடை வாங்க வரும் போது அவனை திருப்பி அனுப்புவது எப்படி என்று எனக்குத் தெரியாதே!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக