வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீன நகைச்சுவைகள் #26

வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு தேநீர் கொடுக்க விரும்பிய வீட்டுக்காரர், வேலைக்காரனை பக்கத்து வீட்டிலிருந்து தேயிலை கடன் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்.

அவன் வருவதற்காக காத்திருக்கும் நேரத்தில், வெந்நீர் போடும் பாத்திரத்தில் நீர் கொதிக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார். சிறிது நேரத்தில் மீண்டும் நீர் கொதிக்க ஆரம்பித்தது, மீண்டும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டியிருந்தது. இதே போல பல முறை நடந்து பாத்திரம் நிறைந்து போன பிறகும் வேலையாள் இன்னும் திரும்பி வரவில்லை.

வீட்டுக்காரரின் மனைவி, 'வந்திருப்பவர் உங்கள் நெருங்கிய நண்பர்தானே, அவரை ஒரு வெந்நீர் குளியல் போடச் சொல்லலாமே' என்று ஆலோசனை சொன்னாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக